ரோஹிங்யா முஸ்லீம்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
ரோஹிங்யா முஸ்லிம்களால் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
மியான்மரில் இன அழிப்புக்கு உள்ளாகும் ரோஹிங்யா முஸ்லீம்கள், அடைக்கலம் தேடி இந்தியா வருகிறார்கள். அவர்களை திருப்பியனுப்புவதில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதைதடுக்க கோரி 2 ரோஹிங்யா முஸ்லீம்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசிடம் கோர்ட் பதில் கேட்டிருந்தது.
மத்திய அரசு இன்று தனது கருத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது. அதில், பயங்கரவாத அமைப்புடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தொடர்புள்ளது. இதுதொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையால் ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது. எனவே அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.













Click it and Unblock the Notifications