ரூபாய் நோட்டுகள் செல்லாது.. மத்திய அரசுக்கு மம்தா, கெஜ்ரிவால் 3 நாள் கெடு !
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் டெல்லியில் உள்ள அசத்புர் மண்டி பகுதியில் பேரணியாக சென்றனர். இருவர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "மோடி அறிவித்த இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினை 3 நாட்களுக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் நாடு 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றுவிடும். இது போன்றதொரு அசாதாரண சூழ்நிலையை நெருக்கடி காலத்திலும் பார்த்ததில்லை.
வங்கியின் வரிசையில் நிற்கும் பொது மக்களுடன், மோடியும் நின்று பார்த்தால்தான் மக்களின் வலி என்னவென்று புரியும் என்றார் அவர். பின்னர் ரிசர்வ் வங்கிக்கு எதிரே நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் மக்கள் தங்களது சேமிப்புகளை வங்கியில் செலுத்தி அதில் கிடைக்கும் ரூ.10 லட்சம் கோடியை, மோடி தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு முதலீடாகக் கொடுத்துவிடுவார் என்றார். இதுவரை ரூபாய் நோட்டு பிரச்சனையால் நாடு முழுவதும் இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு யார் பொறுப்பு எனவும் கேள்வி எழுப்பினார். போராட்டத்துக்கு பின்னர், இரண்டு மாநில முதல்வர்களும் ரிசர்வ் வங்கி ஆளுனரை சந்தித்துப் பேசினர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications