கேரளாவின் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி ரொக்கம், 300 பவுன் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி பணம், 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் வளவட்டினம் மண்ணா பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் அரிசி வியாபாரியாவார். இவர் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.

crime kannur

இந்த அலுவல்கள் முடிந்து அவர் வீடு திரும்பிய நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டு சமையலறை ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்ட அஷ்ரப் குடும்பத்தினர், அவர்கள் பணம், நகை வைத்திருக்கும் லாக்கர் இருக்கும் அறைக்கு சென்றனர்.

அங்கு சென்று பார்த்த போது லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ 1 கோடி ரொக்க பணமும் 300 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவிகளில் சிக்காமல் இருக்க அவற்றை வேறு திசையில் திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+