ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளிடம் புதிய ரூ.2000 நோட்டுகள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிம் பந்தோபோராவில் இருக்கும் ஹன்ஜன் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளும் அடக்கம்.
தீவிரவாதிகளிடம் 2 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த பிறகு தீவிரவாதிகள் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றிருப்பார்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.