தங்கம்.. வைரம்.. நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி பறிமுதல்!
நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி: நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நாடு முழுவதும் இந்த மோசடி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தற்போது நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் நீரவ் மோடி. இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
அதேபோல் அவரது நண்பர்களும் இந்த சோதனை வட்டத்தில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான சொந்தமான இடங்களிலும் கோடிக்கணக்கில் பறிமுதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications