பாஜக அமைச்சரின் காரிலிருந்து ரூ91 லட்சம் பணம் பறிமுதல்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு !

பாஜக அமைச்சர் ஒருவரின் காரில் இருந்து கணக்கில் வராத பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கிற்கு சொந்தமான வாகனத்தில் இருந்து ரூ.91 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் சுபாஷ் தேஷ்முக். இவருக்கு சொந்தமாக உள்ள லோக்மங்கல் குழுமத்தில் ஏராளமான கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழுிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு லஞ்ச ஒழிப்புத் துறையும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

Rs 92 lakh cash seized from BJP minister's vehicle

இந்த சோதனையின் போது சுபாஷ் தேஷ்முக்குக்கு சொந்தமான கார் ஒன்று வந்தது. அதில் தடை விதிக்கப்பட்டுள்ள ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது. இந்தத் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரிக்கப்பட்டதில் சரியான ஆவணங்கள் எதையும் அவர் வழங்கவில்லை, இதனையடுத்து கைது செய்யப்பட்டார். உஸ்மனாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாஜக அமைச்சரின் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+