பெரும்பான்மை சமூகத்தினர் 'பெருவாரியாக' வாக்களித்து வரலாறு படைக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.
போபால்: லோக்சபா தேர்தலில் "பெரும்பான்மை" சமூகத்தினர் 100% வாக்குகளை செலுத்தி வரலாறு படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாரத் விஜய் அபியான் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். அதில் சிறுபான்மை சமூகத்தினரை திருப்திபடுத்துவதற்காக, பெரும்பான்மை சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் பெயரைக் குறிப்பிடாமல், இது நாட்டில் தேசியவாத அரசு அமைவதற்கான தருணம்.. இந்த நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள் ஏழ்மையில் தவிக்க விட்டுவிட்டனர்.. சிறுபான்மையை திருப்திபடுத்துவதிலேயே கவனம் செலுத்தினர்.. சிறுபான்மையினருக்காக பெரும்பான்மை சமூகத்தை பிளவுபடுத்தினர்..
தற்போதைய தேர்தலில் இந்த நிலைமையை மாற்றிக் காட்ட வேண்டும். பெரும்பான்மை சமூகத்தினர் 100% வாக்குகளை ஒற்றுமையாக செலுத்தி வரலாறு படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications