சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..!
நாக்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருக்கிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது இல்லை என்றும் முஸ்லீம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். போலி தகவல்களை உலவவிட்டு இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

சி ஏ ஏ குறித்து விரிவாக விவாதிப்பதற்குள் கொரோனா நம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டது என்றும் எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பதிலடியை பார்த்து சீனா மிரண்டு போய் உள்ளதாகவும் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். இதனிடையே சி ஏ ஏ வை முன்னிறுத்தி மீண்டும் சிலர் போராட்டங்களை தூண்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக அவர் சாடியிருக்கிறார்.
தங்களை பொறுத்தவரை ஆட்சி, அதிகாரம் மீது ஆசைகொள்ளவும் இல்லை அதன் மீது கவனம் செலுத்துவதும் இல்லை என சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆண்டுதோறும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தசரா விழா வெகு விமரிசையாக நடைபெறும் சூழலில் இந்தாண்டு கொரோனா காரணமாக 50 பேரை கொண்டு மட்டுமே நிகழ்ச்சி நடைபெற்றது.
மோகன் பாகவத் தனது பேச்சின் போது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் 370 ரத்து, அயோத்தி வழக்கில் தீர்ப்பு, உள்ளிட்ட விவகாரங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications