For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா.. நாக்பூர் மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 7 ம் தேதி மோகன் பகவத்துக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டது. பகவத்துடன், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி நாவ்பூரின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுக் கொண்டார்.

RSS chief Mohan Bhagwat tests Covid-19 positive

இந்த நிலையில், இந்தி மொழியில் ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் "ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின் டாக்டர் மோகன் பகவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் உள்ளன, மேலும் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகமாகும். இந்தியாவில் வெள்ளிக்கிழமை 1.31 லட்சம் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களும், டெல்லி யூனியன் பிரதேசமும் புதிய கேஸ்களில் 83.29 சதவீத பங்களிப்புடன் உள்ளன.

மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலாக 58,993 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. மும்பையில் 9,200 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.

English summary
Rashtriya Swayamsevak Sangh (RSS) Chief Mohan Bhagwat was tested positive for Covid-19 on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X