கேரள அரசின் விதியை மீறிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்... தனியார் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றினார்
திருவனந்தபுரம்: கேரளாவில் சென்ற வருட சுதந்திர தின விழாவின் போது அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கொடி ஏற்றுவதாக இருந்தது. ஆனால் அதற்கு கேரளா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
அவர் கொடி ஏற்றக்கூடாது என்று அங்கு சிலர் போராட்டங்கள் கூட நடத்தினார்கள். இந்த நிலையில் இந்த வருடம் குடியரசுத் தின விழாவில் அவர் கொடி ஏற்றுவார் என்று கூறப்பட்டது.
அவர் கொடி ஏற்றுவதை தடுக்கும் வகையில் கேரள அரசு நிறைய விதிமுறைகளை புகுத்தியது. ஆனால் அவர் அனைத்து விதிகளையும் மீறி தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார்.

விதி என்ன
கேரள அரசு ஒருவாரத்திற்கு முன்பு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் ''கேரளாவில் இருக்கும் பள்ளிகளில் பள்ளி தலைவர் மட்டுமே கொடியை ஏற்ற வேண்டும். அவரை தவிர யாரும் கொடி ஏற்றக்கூடாது.'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.

ஏன் இந்த விதி
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளருக்கு சொந்தமான பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கொடி ஏற்றப் போவதாக தகவல் வந்தது. இதை தடுக்கவே இந்த புதிய விதி புகுத்தப்பட்டது. இதை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

விதியை மீறினார்
ஆனால் இன்று குடியரசுத் தின விழாவில் மோகன் பாகவத் அனைத்து விதிகளையும் மீறி கொடியை ஏற்றினார். அது தனியார் பள்ளியாகும். மேலும் ஆர்.எஸ்.எஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டார்கள்.
சர்ச்சை
தற்போது இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. இந்த விதி தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று அந்த பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது. அதே சமயத்தில் இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆளும் கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications