கேரள அரசின் விதியை மீறிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்... தனியார் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றினார்
திருவனந்தபுரம்: கேரளாவில் சென்ற வருட சுதந்திர தின விழாவின் போது அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கொடி ஏற்றுவதாக இருந்தது. ஆனால் அதற்கு கேரளா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
அவர் கொடி ஏற்றக்கூடாது என்று அங்கு சிலர் போராட்டங்கள் கூட நடத்தினார்கள். இந்த நிலையில் இந்த வருடம் குடியரசுத் தின விழாவில் அவர் கொடி ஏற்றுவார் என்று கூறப்பட்டது.
அவர் கொடி ஏற்றுவதை தடுக்கும் வகையில் கேரள அரசு நிறைய விதிமுறைகளை புகுத்தியது. ஆனால் அவர் அனைத்து விதிகளையும் மீறி தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார்.

விதி என்ன
கேரள அரசு ஒருவாரத்திற்கு முன்பு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் ''கேரளாவில் இருக்கும் பள்ளிகளில் பள்ளி தலைவர் மட்டுமே கொடியை ஏற்ற வேண்டும். அவரை தவிர யாரும் கொடி ஏற்றக்கூடாது.'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.

ஏன் இந்த விதி
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளருக்கு சொந்தமான பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கொடி ஏற்றப் போவதாக தகவல் வந்தது. இதை தடுக்கவே இந்த புதிய விதி புகுத்தப்பட்டது. இதை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

விதியை மீறினார்
ஆனால் இன்று குடியரசுத் தின விழாவில் மோகன் பாகவத் அனைத்து விதிகளையும் மீறி கொடியை ஏற்றினார். அது தனியார் பள்ளியாகும். மேலும் ஆர்.எஸ்.எஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டார்கள்.
சர்ச்சை
தற்போது இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. இந்த விதி தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று அந்த பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது. அதே சமயத்தில் இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆளும் கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications