காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐ.பி.எஸ்!
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

அங்கு ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்மாநில ஆளுநர் வோராவிற்கு ஆலோசகராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் மிகவும் திறமையான நபரை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரை நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில், விஜயகுமாரை தனக்கான ஆலோசகராக நியமித்து, காஷ்மீர் மாநில ஆளுநர் வோரா உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை அம்மாநில செயலாளர் வெளியிட்டுள்ளார். இன்று ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் விஜயகுமார், நாளை ஆளுநரின் ஆலோசகராக பொறுப்பேற்கிறார். தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றியதை அடுத்து அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications