மும்பை ரயில் நிலைய பாலம் விபத்துக்கு காரணம் இரு வதந்திகள்.. பரபரப்பு தகவல்
மும்பை எல்பின்ஸ்டோன் என்ற பாலம் உடையும் என பரவிய வதந்தியே அங்கு உண்டான உயிர் பலிக்கு காரணம் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை: மும்பை எல்பின்ஸ்டோன் பாலத்தில் உண்டான கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் பலியானதற்கு, அங்கு பரவிய இரண்டு வதந்திகளே முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பை எல்பின்ஸ்டோன் சாலை மேம்பாலத்தில் ரயில் நிலையம் செல்லும் மக்கள் மழைக்காக ஒதுங்கியுள்ளனர். நேற்று மும்பையில் கனமழை பெய்த காரணத்தால் ரயில் நிலையத்துக்குச் செல்ல இருந்த மக்கள் கூட்டமாக அங்கு ஒதுங்கியுள்ளனர்.

இரு வதந்திகள்
அப்போது பரவிய இரண்டு வதந்திகளால்தான் உயிர் பலியானது என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் ரயில் நிலையத்தில் மின் கசிவு என ஒரு வதந்தியை பரப்பிவிட்டனர்.

முண்டியடித்த மக்கள்
அடுத்து, கூட்டத்தில் யாரோ, 'இத்தனை கூட்டத்தை இந்த பாலம் தாங்காது. பாலம் உடைந்துவிடும்' என கூறியுள்ளனர். இது அங்கிருந்த மக்களிடம் பரவ, பாலம் உடைந்துவிடுமோ என்கிற பதற்றத்தில் மக்கள் அவசரம் அவசரமாக முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்த்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்தது இப்படித்தான்
இந்த சம்பவத்தைப் பார்த்த ஒருவர் கூறுகையில், பாலம் உடைந்துவிடும் என்ற வதந்தி பரவியதும் மக்கள் இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என நெருக்கியடித்து ஓடியதால் தான் மரணம் நிகழ்ந்தது என கூறினார்.

மூச்சுத்திணறல்
இந்த சம்பவத்தின் போது பெண்கள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். ஆனால் ஆண்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறி தப்பித்தனர். இதனால் பெண்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications