சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின்போது யானைகளை பயன்படுத்த கூடாது: ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த கேரள ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அம்மாநிலத்தோர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் கலசபூஜை நடைபெறுவது வழக்கம்.

மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். மேலும் வருடாந்திர திருவிழாவின் போதும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்துவதற்கு கோவில் உள்ள தந்திரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவிப்பதால் இதனை ஹைகோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதன்பேரில் யானைகள் பயன்படுத்துவது குறித்து கண்டரரு மகேஷ்வரரு, ராஜீவ்வரரு ஆகியோரிடம் விளக்கம் கேட்டப்பட்டது.
அப்போது அவர்கள் மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்த அவசியம் இல்லை. ஆனால் வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த தடை விதித்தும், வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்து தீர்ப்பு உத்தரவிட்டனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ்












Click it and Unblock the Notifications