சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின்போது யானைகளை பயன்படுத்த கூடாது: ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த கேரள ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அம்மாநிலத்தோர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் கலசபூஜை நடைபெறுவது வழக்கம்.

மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். மேலும் வருடாந்திர திருவிழாவின் போதும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்துவதற்கு கோவில் உள்ள தந்திரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவிப்பதால் இதனை ஹைகோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதன்பேரில் யானைகள் பயன்படுத்துவது குறித்து கண்டரரு மகேஷ்வரரு, ராஜீவ்வரரு ஆகியோரிடம் விளக்கம் கேட்டப்பட்டது.
அப்போது அவர்கள் மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்த அவசியம் இல்லை. ஆனால் வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த தடை விதித்தும், வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்து தீர்ப்பு உத்தரவிட்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications