சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின்போது யானைகளை பயன்படுத்த கூடாது: ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த கேரள ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அம்மாநிலத்தோர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் கலசபூஜை நடைபெறுவது வழக்கம்.

மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். மேலும் வருடாந்திர திருவிழாவின் போதும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்துவதற்கு கோவில் உள்ள தந்திரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவிப்பதால் இதனை ஹைகோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதன்பேரில் யானைகள் பயன்படுத்துவது குறித்து கண்டரரு மகேஷ்வரரு, ராஜீவ்வரரு ஆகியோரிடம் விளக்கம் கேட்டப்பட்டது.
அப்போது அவர்கள் மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்த அவசியம் இல்லை. ஆனால் வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த தடை விதித்தும், வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்து தீர்ப்பு உத்தரவிட்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications