Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் 1,00,969 பேர் தரிசனம்- புல்மேடு பாதையில் நெரிசல்!

Subscribe to Oneindia Tamil

பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 1,00,969 பேர் தரிசனம் செய்தனர். சபரிமலையில் பக்தர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து பதினெட்டு படிகளேறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Sabarimala: Over 1 lakh pilgrims visit on Ayyappa Temple on Sunday

15 மணிநேரம் காத்திருப்பு: விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் வெள்ளம் போல திரண்டிருந்தது. அப்பாச்சி மேடு முதல் சன்னிதானம் வரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து 18 படிகளேறி தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று மட்டும் 1,00,969 தரிசனம் செய்தார். நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐயப்பன் தரிசனத்துக்காக பக்தர்கள் 15 மணிநேரம் வரை காத்திருந்தனர்.

புல்மேடு பாதை: பம்பை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால், புல்மேடு பாதை வழியாக சன்னிதானம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புல்மேடு பாதை வழியாக சன்னிதானத்துக்கு நேற்று 5,798 பேர் தரிசனத்துக்காக வந்தடைந்தனர்.

தமிழக பக்தர்கள் படுகாயம்: சபரிமலையில் இருந்து தரிசனம் முடிந்துவிட்டு தமிழ்நாடு பக்தர்கள் பேருந்து நிலக்கல் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

தங்க அங்கி, மண்டல பூஜை: சபரிமலையில் மன்டல பூஜை நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய நாளில் திருவிதாங்கூர் மகாராஜா, ஐயப்பனுக்கு வழங்கிய 450 பவுன் நகைகள் அணிவித்து வழிபாடு நடத்தப்படும். இதனையொட்டு தங்கி அங்கி ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்பட்டு சென்றது. நாளை பிற்பகல் பம்பை கணபதி கோவிலை தங்க அங்கி சென்றடையும். அன்று மாலை அப்பாச்சி மேடு, நீலிமலை வழியாக சன்னிதானத்தை தங்க அங்கி சென்றடையும் போது திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு நாளை பிற்பகல் 18 படிகளேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

3 நாட்கள் நடை சாத்தப்படும்: மேலும் 27-ந் தேதி கோவில் நடை சாத்தப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக 3 நாட்களுக்கு பின்னர் சனிக்கிழமை மாலை நடை திறக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை ஜனவரி 15-ந் தேதி நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+