பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!
பம்பை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சபரிமலையில் கோயில், 18 ஆம் படி, கொடிமரம், சோபானம் ஆகிய இடங்கள் கேரள போலீஸ் மற்றும் மத்திய அதிவிரைவு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நவீன துப்பாக்கிகளுடன் கோயிலை சுற்றி நிறுத்தப்பட்டனர்.

மத்திய ரிசர்வ் போலீசாரின் அதிரடிப்படை பிரிவினருக்கு எவ்வித நெருக்கடியையும் எதிர் கொள்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரணப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
கோயிலின் அனைத்து வாசல்களிலும் ம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டது. நடைப்பந்தலில் எக்ஸ்ரே ஸ்கேனர்களில் பக்தர்களின் பைகள் ஸ்கேன் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அண்டை மாநிலங்களில் இருந்து வந்துள்ள போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்னிதானத்தின் சுற்றப்புறங்களில் உள்ள குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மெட்டர் டிடெக்டர் மற்றும் நவீன கருவிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

குப்பை கூட்டப்பட்டிருக்கும் இடங்களையும் போலீசார் விட்டுவைக்கவில்லை. கடைகளில் அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.

பம்பையில் கணபதி கோயில் அருகில் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப் பட்டனர்.பம்பையில் இருந்து சன்னிதானம் வந்து தரிசனம் நடத்துவதற்கிடையில் மூன்று இடங்களில் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப் படுகின்றனர். சன்னிதானத்தில் அறைகளில் தங்கியிருப்பவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவையும் போலீசாரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுகண்காணிக்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications