Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபேரா™ 2025  விருதுகள்.. வளர்ச்சியும், முன்னேற்றமும் சந்திக்கும் இடம்.. பரிசு பெற்ற சாதனையாளர்கள் 

Subscribe to Oneindia Tamil

SABERA™ 2025 இன் எட்டாவது பதிப்பு 2025 டிசம்பர் 15, திங்கள் அன்று பிற்பகல் 1:00 மணிக்கு (IST) இந்தியா ஹேபிடேட் சென்டரில் நடைபெற்றது. நோக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைக்க உறுதியளித்த தலைவர்கள், புதுமையாளர்கள் மற்றும் அமைப்புகளின் ஊக்கமளிக்கும் ஒன்றுகூடலாக இது அமைந்தது.

ஐ.நா. பெண்கள் விருது பெற்ற சிம்ப்ளி சுபர்னா மீடியா நெட்வொர்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட SABERA™, லாபத்திற்கு அப்பாற்பட்ட, அளவிடக்கூடிய சமூகத் தாக்கத்தை உருவாக்கும் பணிகளை அங்கீகரிப்பதன் மூலம் 'நல்லதை' நிலைநிறுத்தும் தனது பணியைத் தொடர்ந்தது. விழாவில் மல்டிபிளக்ஸ் ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியின் மகளான தொகுப்பாளினி நைனா குமாரி, சிறப்புடன் கலந்து கொண்டார். அவரது இருப்பு, பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் குரல்களுக்கு வாய்ப்பை வழங்குவதிலும், பெருமைப்படுத்துவதிலும் SABERA™-ன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டியது.

நிறுவனரும், தொகுப்பாளருமான சுபர்னா சதா, கூட்டு நலனை அடிப்படையாகக் கொண்ட பொறுப்பான கதைசொல்லல் மற்றும் கதை கட்டமைப்பிற்கான தளத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். SABERA™ 2025 நிகழ்வில், ஆம்ப்யாவின் பாரதி ஸ்ரீனிவாசன் மற்றும் கரோ சம்பவ்'வின் பிரான்ஷூ சிங் போன்ற மாற்றத்தை உருவாக்குபவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

SABERA™-வில், தொலைதூர கிராமங்கள் முதல் தலைமைப் பொறுப்புகள் வரை, அமைதியாக வாழ்க்கையை மாற்றியமைப்பவர்கள், இந்தியாவின் எதிர்காலத்தின் உண்மையான சிற்பிகளாக அறியப்பட்டு, கேட்கப்பட்டு, கொண்டாடப்படுவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி" என்று நிறுவனரும், தொகுப்பாளருமான சுபர்னா சதா கூறினார்.

சுபர்னா மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் குர்சரண் தாஸ் இடையேயான ஒரு ஈர்க்கக்கூடிய முக்கிய உரையாடல், அறம், பொருள் மற்றும் 'நல்ல வாழ்வுக்கான' தேடல் போன்ற தலைப்புகளை ஆராய்ந்தது. அது அன்று மாலை வழங்கப்பட்ட அங்கீகாரங்களுக்கு ஒரு பிரதிபலிப்பு பின்னணியை வழங்கியது.

உங்கள் வாழ்க்கைக்கு நோக்கத்தையும், அர்த்தத்தையும் கொடுக்கும் ஒரு செயலைச் செய்வது, செழிப்பான, நிறைவான வாழ்க்கை எனப் புரிந்து கொள்ளப்படும் ஆழமான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த உணர்வில் ஒரு நல்ல வாழ்க்கை, அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு (மோட்சம்) ஆகிய வாழ்க்கையின் பாரம்பரிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது. இவை மனித திறன்கள், அவற்றை உணர்வதே முழுமையாகவும், செழிப்பாகவும் வாழ்வது" என்று குர்சரண் தாஸ் விளக்கினார்.

SABERA™ 2025க்கான தேர்வுகள் பட்டியலை உருவாக்கிய SABERA™முன்னோடித் தேர்வுக் குழுவின் ராதிகா படேல், ரஷ்வா பரிஹார், விகாஸ் பாட்டியா, ரஷ்மி சோனி மற்றும் அபி மகாபத்ரா ஆகியோரும் இந்த நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டனர். உர்வாசி பிரசாத், ராஜீவ் சபா மற்றும் கீதா கோயல் உள்ளிட்ட முக்கிய ஜூரி உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று, மதிப்பீட்டுச் செயல்முறையின் நம்பகத்தன்மையையும், ஆழத்தையும் உறுதிப்படுத்தினர்.

புகழ்பெற்ற பத்திரிகையாளர் பத்ரா சின்ஹா மற்றும் கார்ப்பரேட் தலைவரான காயத்ரி சர்மா ஆகியோரின் இனிய இணைந்த நடன நிகழ்ச்சி, துர்க்காதேவியின் நவ ரசங்களை அல்லது 9 உணர்வுகளை வெளிப்படுத்தி கலாச்சார முக்கியத்துவம் சேர்த்தது.

'இந்தியாவின் மாற்றத்தை உருவாக்குபவர்களைக் கொண்டாடுதல்' என்ற தலைப்பில் நடந்த SABERA™2025 விருதுகள், ஐக்கிய நாடுகள் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள், நிறுவனங்களின் அளவுகள் மற்றும் துறைகள் என பல்வேறு கள அளவிலான தாக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. அடிமட்ட சமூக நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை, பல்வேறு தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அறிவுசார் மாற்றுத்திறனாளியான பாரதி ஸ்ரீனிவாசன் (AMBA), தனது வாழ்க்கைப் பயணத்தை அறிவுசார் மாற்றுத்திறன் கொண்ட பெரியவர்களுக்கான நீண்டகால சேவையாக மாற்றியமைத்ததற்காக அங்கீகரிக்கப்பட்டார். சுழற்சி முறை மற்றும் குறைந்த கார்பன் எதிர்காலத்திற்காக இந்தியாவின் கழிவு சுற்றுச்சூழல் அமைப்பை மறுசீரமைத்து வரும் கரோ சம்பவ் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஷூ சிங் மற்றும் அடையாளம் மற்றும் சமூக நலனுக்கான வழிகளாக கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் ப்ரோஜெக்ட் ஃப்யூல்'ஐ (Project FUEL) சேர்ந்த ஆயுஷி ஜெய்ஸ்வால் போன்ற பிற சமூகத் தலைவர்களும் ஜூரியால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றத்தை உருவாக்குபவர்களில் அடங்குவர்.

ஜூரி உறுப்பினர்கள் அறியப்படாத கதாநாயகர்கள் மீது கவனம் செலுத்தும் வகையில், 40 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்திற்குக் கீழ் செயல்படும் குறைந்த பட்ஜெட், சமூக வேரூன்றிய முன்முயற்சிகள் பாராட்டப்பட்டன. இதில் டிரான்ஸ்-இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள பிளானட் ஸ்பிட்டி, கிராமப்புற உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஐ-வில்லேஜ் மற்றும் கிராமப்புற மகாராஷ்டிராவில் உள்ள ஜோதி பகுத்தீஷியா சேவபாவ் அமைப்பு ஆகியவை ஆழமான, குறிப்பிட்ட பிராந்தியத் தாக்கத்திற்காகக் கௌரவிக்கப்பட்டன.

பெங்களூரு யுனைடெட் வே, தி ஹன்ஸ் ஃபவுண்டேஷன், பன்சிதர் மற்றும் இலா பாண்டா ஃபவுண்டேஷன், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எடாஷா சொசைட்டி, கிராஃப்டிசன் ஃபவுண்டேஷன், ரோடிஸ் (ROADIS) மற்றும் சுஷேனா ஹெல்த் ஃபவுண்டேஷன் போன்ற நிறுவன வெற்றியாளர்கள், பின்தங்கிய சமூகங்களில் நீர் பாதுகாப்பு, காலநிலை மீள்தன்மை, உள்ளடக்கிய கல்வி, சமமான வாழ்வாதாரங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வு பிரிவில் யுனைடெட் வே ஆஃப் பெங்களூரு மற்றும் தி ஹன்ஸ் ஃபவுண்டேஷனும், கல்வி பிரிவில் பன்சிதர் அன் இலா பாண்டா ஃபவுண்டேஷனும் 5 கோடி ரூபாய் வருமானத்திற்கு மேல் பெற்ற நிறுவன பிரிவில் விருதுகளை வென்றன. பிளானட் ஸ்பிட்டி ஃபவுண்டேஷன் கல்வி பிரிவில் 40 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ள நிறுவன பிரிவில் விருது பெற்றது.

கிராமப்புற வளர்ச்சி, பாலின உள்ளடக்கம் மற்றும் புதுமை ஆகியவை ரோஷினி ஃபவுண்டேஷன், எஸ்.பி.ஐ. ஃபவுண்டேஷனின் சம்மான், சஷக்தி மற்றும் கிராம் சேவா முன்முயற்சிகள், ஐ-வில்லேஜின் கிராமப்புறப் பெண்களுக்கான திட்டங்கள், ஜல்சக்ரா இன்னோவேஷன்ஸின் கவ்னாமிக்ஸ்®, பிரிசம் ஜான்சன், ஹியூமன் வென்ச்சர்ஸ் மற்றும் ஹக்தார்ஷக் மூலம் மேலும் முன்னிலைப்படுத்தப்பட்டன. சுகாதாரப் பாதுகாப்பு பிரிவில் ரோடிஸ், மோகன் ஃபவுண்டேஷன் - மணிப்பூர், சுஷேனா ஹெல்த் ஃபவுண்டேஷனும் விருதுகளை வென்றன.

சிறு மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு மீள்தன்மை கொண்ட, கண்ணியமான வாழ்வாதாரங்களை உருவாக்க பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஆக்‌ஷன் ஃபார் சோஷியல் அட்வான்ஸ்மென்ட் (ASA) இன் ஆஷிஸ் மொண்டலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிரதம் அமைப்பைச் சேர்ந்த ஃபரிதா லேம்பேவும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். மேலும், சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) சிறந்த நடைமுறைகளுக்கான அதன் துறைசார் தலைமைத்துவ உறுதிப்பாட்டிற்காக ஹீரோ மோட்டோகார்ப் (500 கோடிக்கு அதிகமான வருமானம்) மதிப்புமிக்க பொறுப்புள்ள வணிக விருதை வென்றது. முழு விருது பெற்றோர் பட்டியலை https://www.sabera.co/awardees-list/ என்ற இணையதளத்தில் காணலாம்.

SABERA™ 2025, ஒரு அர்ப்பணிப்புள்ள கூட்டாண்மை சூழல் அமைப்பின் ஆதரவுடன் நடைபெற்றது. இதில் அமர் உஜாலா (இந்தி டிஜிட்டல் ஊடகப் பங்குதாரர்), ஒன்இந்தியா (ஆங்கில டிஜிட்டல் ஊடகப் பங்குதாரர்), ஸ்மைல் ட்ரெய்ன் (அறிவுப் பங்குதாரர்), சரோனா ஹைஜீன் (பரிசுப் பங்குதாரர்) மற்றும் ஹவிஷ் எம் (ஆலோசனைப் பங்குதாரர்) ஆகியோர் அடங்குவர். இவர்களின் ஒத்துழைப்பு, SABERA™ன் நீண்டகாலப் பணியான அர்த்தமுள்ள தாக்கத்தை அங்கீகரிப்பதையும், இந்தியாவின் வளர்ச்சி விவாதத்தை வடிவமைக்கும் கதைகளை விரிவாக்குவதையும் பலப்படுத்துகிறது.

கூட்டு நன்றி தெரிவிப்புடனும், குழுப் படத்துடனும் மாலை நிறைவடைந்தபோது, SABERA™ஒரு சக்திவாய்ந்த உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியது: வளர்ச்சி என்பது வெறும் அளவை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக நோக்கம், சமூக மேம்பாடு, உள்ளடக்கிய, சமத்துவமான, விழிப்புணர்வுள்ள இந்தியாவை நோக்கிச் செயல்படும் மக்கள் மற்றும் நிறுவனங்களால் ஆனது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+