For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓய்வுக்கு பிறகும் சச்சின் உலக சாதனை... பேட்டால் இல்லை, பேனாவால்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: ஓய்வுக்கு பிறகும் சச்சின் தனது கையால் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆனால் இது பேட்டால் கிடையாது, பேனாவால்.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் படைக்காத சாதனைகள் கிடையாது. இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது சுய சரிதை ஒன்று அதிகபட்சமாக விற்பனையான சாதனை, சச்சின் சுயசரிதையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Sachin book breaks records

ஸ்டீவ் ஜாப்ஸ்சின், சுய சரிததான் அதிகபட்சமாக 1 லட்சத்து 30 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்திருந்தது. ஆனால் சச்சின் புத்தகமோ அது வெளியாகும் முன்பே 1 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்கூட்டிய பதிவு மற்றும் விற்பனை ஆகிய இரு பிரிவுகளிலுமே சச்சின் சுயசரிதை அதிகப்படியாக விற்பனையாகியுள்ளது. புத்தக வெளியீட்டு நிறுவனமான Hachette India-வின் மேலாண் இயக்குநர் தாமஸ் ஆப்ரகாம் இதுகுறித்து கூறுகையில், "சச்சின் பேட் அற்புதம் செய்வதை போல அவரது பேனாவும் அற்புதம் செய்ததில் வியப்பேதும் இல்லை" என்று கூறியுள்ளார்.

English summary
Sachin Tendulkar's autobiography "Playing It My Way", released Thursday, has broken all records of an adult hardback on pre-order subscriptions across both fiction and non-fiction categories, a statement from the publishers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X