Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் அவன் இல்லை.. தலித் என்பதாலே குறி.. ஆபாச சிடி பற்றி ஆம் ஆத்மி மாஜி மந்திரி கூறுவதை பாருங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதால், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

கெஜ்ரிவால் அரசில் சமூக நலத்துறைக்கு பொறுப்பு வகித்து வந்தவர் அமைச்சர் சந்தீப்குமார். இவர் ஆறு பெண்களுடன் இருப்பது போன்ற சிடி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால், இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சந்தீப்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை உள்ளூர் சேனல் ஒன்று அமைச்சர் சந்தீப்குமார் ஆறு பெண்களுடன் இருக்கும் அந்த வில்லங்க வீடியோவை ஒளிபரப்பு செய்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முதல்வர் கெஜ்ரிவால், உடனடியாக சந்தீப்குமாரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

மூன்றாவது அமைச்சர்

மூன்றாவது அமைச்சர்

இரண்டாவது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பின்னர், பதவியில் இருந்து நீக்கப்படும் மூன்றாவது அமைச்சர் சந்தீப்குமார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆனால், டிவியில் ஒளிரப்பானதால் மட்டுமே சந்தீப்குமாரை அமைச்சர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் நீக்கினார் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

சமரசம் இல்லை

சமரசம் இல்லை

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால், சந்தீப்குமார் தொடர்பாக சர்ச்சைக்குரிய சிடி கிடைத்துள்ளது. பொதுவாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

பொறுக்காது

பொறுக்காது

செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, குற்றச்செயல்கள், ஊழல்களில் ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சி சமரசம் செய்து கொள்ளாது. முதல் அமைச்சர் உள்பட யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

சதி

சதி

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தீப் குமார் கடுமையாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது எனக்கு எதிரான சதியாகும்.

நான் அவன் இல்லை

நான் அவன் இல்லை

சர்ச்சைக்குரிய அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை. அந்த வீடியோ டேப்பில் உண்மையில்லை. ஏபிபி செய்தி நிறுவனம் கூட, இந்த டேப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என கூறியுள்ளது. இது குறித்து நிச்சயம் விசாரணை நடத்தி, டேப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

தலித் என்பதால்..

தலித் என்பதால்..

நான் தலித் பிரிவை சேர்ந்தவன் என்பதற்காக என்மீது குறி வைக்கப்பட்டு உள்ளது. தலித்தாக இருப்பதால் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன். இது எனக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும். இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+