பெண் சாமியார் பிரக்யா விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுனில் ஜோஷி கொலை வழக்கு!
டெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து தப்பிய பெண் சாமியார் பிரக்யா, ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர் சுனில் ஜோஷி கொலை வழக்கில் அவ்வளவு எளிதாக தப்ப முடியாது என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா மீதான குற்றசாட்டுகளை தேசியப் புலனாய்வு ஏஜென்சி கைவிட்டிருந்த நிலையில் பிரக்யா, சுனில் ஜோஷி கொலை வழக்கில் இருந்து வெளியே வர தொடர்ந்து போராடி வருகிறார். மாலேகான் வழக்கில் இருந்த முக்கியமான சிக்கல்களையும் தடைகளையும் பிரக்யா தாண்டிவிட்டார்.

ஆனால் சுனில் ஜோஷி கொலை வழக்கில் அவர் ஜாமீன் பெற்றால்தான் அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியும் என்று அவரது முன்னாள் வழக்கறிஞர் கணேஷ் சோவானி ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியுமான சுனில் ஜோஷி படுகொலை வழக்கில் சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது. பெண் துறவி பிரக்யாவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதால் ஜோஷி கொலை செய்யப்பட்டார் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சுனில் ஜோஷி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதே தங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்று கூறிய பிரக்யாவின் முன்னாள் வழக்கறிஞர் சோவானி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications