ஆண்டுக் கணக்கில் தலைக்கு மேல் தொங்கும் வாள்: சல்மான் வழக்கு பற்றி தம்பி சொஹைல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கான் வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாக அவரது தம்பியும், பாலிவுட் நடிகருமான சொஹைல் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கில் நடந்து வந்தது.

சல்மான்

சல்மான்

விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதும், படப்பிடிப்புகளுக்கு செல்வதுமாக ஆண்டுகளை கடத்தி விட்டார். வழக்கில் அவ்வப்போது திருப்புமுனைகள் ஏற்பட்டது.

டிரைவர்

டிரைவர்

சம்பவம் நடந்த அன்று நான் தான் காரை ஓட்டினேன் என சல்மான் கானின் டிரைவர் அசோக் சிங் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் அவர் திடீர் என்று ஆஜரானார்.

தீர்ப்பு

தீர்ப்பு

சல்மான் கான் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொஹைல்

சொஹைல்

சல்மான் வழக்கு பற்றி அவரது தம்பி சொஹைல் கான் கூறுகையில், இந்த வழக்கின் தீர்ப்பு வாள் போன்று பல ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

காஷ்மீர்

காஷ்மீர்

பஜ்ரங்கி பாய்ஜான் படப்பிடிப்பில் காஷ்மீரில் இருந்த சல்மான் கான் நீதிமன்ற தீர்ப்பையொட்டி மும்பை கிளம்பி வந்துள்ளார். நாளைய தீர்ப்பை நினைத்து அவரை வைத்து படம் எடுத்து வரும் தயாரிப்பாளர்கள் தான் மிகவும் டென்ஷனாக உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+