உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி மாவட்டத் தலைவர் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாண்டா மாவட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரான பாதல் கான், அவரது உதவியாளர் பங்கஜ் ஆகியோர் அங்குள்ள மத்தவுத் நகர் நோக்கி ஸ்கார்பியோ காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் கியோதாரா முப்பிரிவில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பலத்த காயத்தால் அவதிப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பலியானதாகவும் காவல்துறையினர் மேலும் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+