பாரு, பரேக் புத்தகங்களுக்கு மோடி தான் ஸ்பான்சர்... திக் விஜய் சிங்
டெல்லி: பிரதமர் குறித்து சர்ச்சைகுரிய கருத்துக்களை எழுதியுள்ள பி.சி.பரேக் மற்றும் பாருவின் புத்தகங்களுக்கு மோடி தான் ஸ்பான்சர் செய்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகராக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இருந்தவர் சஞ்சய் பாரு. அண்மையில் இவர் எழுதி வெளியாகியுள்ள புத்தகத்தில், பிரதமர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் கோப்புகளை சோனியா காந்தி பார்வையிட்டதாகவும், அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை சோனியா காந்தியே எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் பி.சி.பரேக் எழுதிய புத்தகம் ஒன்று இன்று வெளியிடப்பட இருக்கிறது. அப்புத்தகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரம் மிகவும் குறைவு தான் என அவர் எழுதியுள்ளதாக தெரிகிறது.
இந்த இரு வேறு புத்தகங்களால் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சைகளை உண்டாகியுள்ளது. மற்ற கட்சியினர் பிரதமர் மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாருவின் புத்தக கருத்திற்கு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த இரு புத்தகங்கலும் பாஜகவின் தூண்டுதலாலும், பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியின் நிதியுதவியினாலும் எழுதப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறுகையில், ‘பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ள இந்த இரண்டு புத்தகங்களுக்கும் மோடி தான் நிதியுதவி செய்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications