சாரதா சிட் பண்ட் மோசடி- 'அறிவித்தபடி' திரிணாமுல் எம்.பி. குணால் கோஷ் தற்கொலை முயற்சி!
கொல்கத்தா: நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள, சஸ்பென்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. குணால் கோஷ் 58 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களை மோசடி செய்து பல்லாயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டது என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் பல அரசியல் பிரபலங்கள், காவல்துறை அதிகாரிகள் கைதாகி உள்ளனர். இவர்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ் எம்.பி.யும் ஒருவர். சாரதா வழக்கில் கைதானால் அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சஸ்பென்ட் செய்துள்ளது.
கொல்கத்தா சிறையில் உள்ள அவர் கடந்த திங்கள்கிழமையன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த வழக்கில் பல உண்மைக் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களையும் 3 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை கொல்கத்தா சிறையில் 58 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்டு சிறைத் துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாம் அறிவித்தபடி சிறையில் குணால் கோஷ் தற்கொலை செய்ய முயற்சித்திருப்பது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க அமைச்சர் பிர்காத் ஹக்கீம், இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு நோயாளிகளுக்கு பழங்களை மட்டுமே வழங்க வந்தேன் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications