இன்று ராஜினாமா கேட்கும் ஓபிஸ் நாளைக்கு என் சொத்துகளையும் கேட்பாரோ... 'சிடுசிடு' சசிகலா
அதிமுக பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லும் ஓபிஎஸ் நாளைக்கு சொத்துகளையும் எழுதி தர சொல்வாரோ என எகிறியிருக்கிறார் சசிகலா.
பெங்களூர்: அதிமுக பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்ய கோரும் ஓபிஎஸ் கோஷ்டி நாளை என் சொத்துகளையும் எழுதி தர சொல்வார்களோ என கடுகடுத்திருக்கிறார் சசிகலா.
அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் கோஷ்டிகள் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

சசி நிராகரிப்பு
ஆனால் சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் 30க்கும் மேற்பட்டோரை ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கியாக வேண்டும் என அடம்பிடிக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. இதை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டாராம்.

கடுமை காட்டிய சசி
சசிகலாவைப் பொறுத்தவரையில், தினகரனை விட்டுக் கொடுத்துவிட்டோம்.. இப்போது என்னுடைய பதவியையும் கேட்பதை ஏற்கவே முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இது தொடர்பாக தம்மை சந்தித்த நபர்களிடம் மிக கடுமையாகவே பேசியிருக்கிறார் சசிகலா.

சொத்தையும் கேட்பாரோ
ஒருகட்டத்தில், அவரு தினகரன் வேண்டாம்னு சொல்வாரு... என்னோட ராஜினாமா கேட்பாரு... நீங்களும் இங்க வந்து நிற்கிறீர்கள்.. இப்படியே போனால் என்னுடைய சொத்துகளையும் எழுதி கொடுக்க சொல்வாரா? என ஒருமையில் விமர்சித்திருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் செய்தபோது இருந்த கோபத்தைவிட அதிகமாக காட்டியிருக்கிறார் சசிகலா.

உங்க சுயநலத்துக்காக
மேலும் உங்களுடைய சுயநலத்துக்காக ஒட்டுமொத்தமாக எங்களையெல்லாம் பழிவாங்க பார்க்கிறீங்களா? அப்படி ஒரு எண்ணத்துடன் என்னை யாரும் பார்க்கவும் வரகூடாது என கறாராக சொல்லி அனுப்பிவிட்டாராம் சசிகலா. இதனால் எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications