கேரளா ஆளுநர் சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராகிறார்?
டெல்லி: கேரளா ஆளுநரும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தற்போது கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் கேரளா ஆளுநருமான சதாசிவம், மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் டெல்லியில் தொடர்ந்து சட்டம் தொடர்பான உயர் பதவியில் பணியாற்ற விரும்பினார்.
ஆனால் அந்த சமயத்தில் டெல்லியில் அவரது சிறப்புக்குரிய உயர் பதவி எதுவும் காலியாக இல்லாமல் இருந்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சதாசிவம் கேரள மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாவதால், அந்த இடத்தில் சதாசிவத்தை நியமனம் செய்ய மத்திய அரசு முன் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சதாசிவம் நியமிக்கப்பட்டால் 2020-ம் ஆண்டு வரை 5 ஆண்டுக்கு பதவியில் இருப்பார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications