Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய மாணவர்கள் திறமையானவர்கள், உதாரணம் ‘சத்யா நாதெல்லா’...: ப.சிதம்பரம் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மற்ற நாட்டு மாணவர்களை விட இந்திய மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். இதற்கு உதாரணமாக இந்தியரான சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதைக் கூறலாம் எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக புதிதாக நியமிக்கப் பட்டுள்ள 46 வயது சத்யா நாதெல்லா இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 3-வது தலைமை செயல் அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

p Chidambaram

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாப்டின் 38 ஆண்டு கால வரலாற்றில், தலைமை பொறுப்பில் ஏற்றிருக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை சத்யா நாதெல்லா பெற்றிருக்கிறார்.

இந்நிலையில்,கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சத்யா நாதெல்லாவைப் பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது, ‘சில இந்திய மாணவர்கள் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாட்டு மாணவர்களை விட திறமையுள்ளவர்களாக உள்ளனர். இல்லாவிடில் 46 வயதான இந்தியர்0 மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்திருக்க மாட்டார்கள்' எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+