காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி... இனியாவது மவுனம் கலைக்குமா மோடி அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து இன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து கள்ள மவுனம் சாதித்து வரும் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பு.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மத்திய அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது.

SC asks Centre to constitute Cauvery management board soon

இதற்கு சப்பை கட்டும் பாஜக தலைவர்களோ, காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது... ஆகையால்தான் தாமதம் என்றெல்லாம் கூறி வந்தார்கள்... குறிப்பாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதையே கிளிப்பிள்ளை போல சொல்லி வந்தார்கள்.

அதேபோல் காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எந்த ஒரு அதிகாரமுமே இல்லை; அதையெல்லாம் ஏற்க முடியாது என்பதும் தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைப்பதுதான் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

அத்துடன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு விரைவாக அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுநாள் வரை உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி போக்கு காட்டி வந்தது மோடி அரசு.

இதோ இப்போது உச்சநீதிமன்றமே தலையில் குட்டி போய் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வேலையை பாருங்கள் என சொல்லியிருக்கிறது.. இப்போதாவது தமிழக பாஜகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒற்றைத் தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க குரல் கொடுப்பார்களா? அல்லது கர்நாடகாவில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற இலவு காத்த கிளியாக தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய பாஜக அரசு காவு கொடுக்க உடந்தையாக இருக்கப் போகிறார்களா?

தமிழக மக்கள் 'ஆவலோடு' எதிர்பார்க்கிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+