அந்தப் பெண்ணிடம் மொபைல் பாஸ்வேர்டை கொடுங்கள்.. வன்புணர்வு குற்றவாளிகளுக்கு நீதிபதி வித்தியாசமான ஆணை
ஹரியானாவில் நடைபெற்று வரும் வன்புணர்வு வழக்கு ஒன்றில் வித்தியாசமான ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சண்டிகர்: ஹரியானாவில் 2015ல் கல்லூரி மாணவி ஒருவரால் பதியப்பட்ட வழக்கில் இந்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் அங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் தன்னுடைய நண்பர்கள் மீது பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார்.
இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடந்தது. கீழ் கோர்ட் தீர்ப்பு வழங்கி பின் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
தற்போது இதில் வித்தியாசமான ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 3 பேரும் தங்கள் மொபைல் பாஸ்வேர்டை அந்தப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தண்டனை
முதலில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக எல்லா ஆதாரமும் இருந்தது. புகைப்பட ஆதாரங்களும் இருந்தது. இதனால் கீழ் கோர்ட் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கியது.

வெளியே வந்தனர்
இதை எதிர்த்து அந்த மூன்று பேரும் மேல்முறையீடு செய்தனர். இதனால் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

போன்
இதை விசாரித்த நீதிபதிகள் ''அந்தப் பெண்ணிடம் மூன்று பேரும் போன் பாஸ்வேர்ட், ஐ கிளவுட் பாஸ்வேர்ட் அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். உடனடியாக கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறார்கள்.

காரணம்
அந்த மூன்று பேரில் யாரோ ஒருவர் அந்தப் பெண்ணுக்கு பழைய புகைப்படங்களை அனுப்பி மிரட்டி இருக்கிறார். இதை அந்தப் பெண்ணே வாங்கி நீக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின் வழக்கு விசாரணையை 20 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications