மாணவர் அமைப்புக்கு தடை விவகாரம்- சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நேரில் ஆஜராக எஸ்.சி. ஆணையம் உத்தரவு!
டெல்லி: பெரியார்-அம்பேத்கர் பெயரிலான மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து 8-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் (எஸ்.சி) நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான பி.எல்.புனியா ஏற்கனவே விளக்கம் கேட்டு ஐ.ஐ.டி.க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நோட்டீசுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் மீண்டும் நேற்று முன் தினம் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஆணையம் கோரியுள்ள விளக்கத்தை அனுப்பாவிட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அமைப்புகளுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. முன்அனுமதி பெற்றே எந்த அமைப்பும் ஐ.ஐ.டி. நிறுவனத்தின் பெயரை உபயோகிக்க வேண்டும்.
சில விதிமுறைகளை அந்த அமைப்பு கடைபிடிக்கவில்லை. அதனால் பெரியார்- அம்பேத்கர் வாசகர் வட்டம் ஐ.ஐ.டி. வளாகத்தையும், அந்த நிறுவனத்தின் உள்கட்டமைப்பை பயன்படுத்தும் அனுமதியையும் மட்டுமே தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். அந்த அமைப்புக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் நேற்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருக்கு 8-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications