இனி சர்தார்ஜி ஜோக்குகள் படிக்க முடியாது? தடை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!!
டெல்லி: சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி ஹர்விந்தர்சிங் சவுத்ரி என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு இன்று ஏற்றுக் கொண்டது.
சீக்கியர்களை வைத்து திரைப்படம், நாடகங்கள், ஊடகங்களில் சர்தார்ஜி ஜோக்குகள் தவறாமல் இடம்பெற்று வருகின்றன. தற்போது இணைய உலகம் விஸ்வரூபமெடுத்த நிலையில் சமூக வலைதளங்களையும் சர்தார்ஜி ஜோக்குகள் ஆக்கிரமித்துள்ளன.

இது தங்களை புண்படுத்துகிறது எனக் கூறி கடந்த பல ஆண்டுகளாக சீக்கியர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்கான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியான ஹர்விந்தர்சிங் சவுத்ரி என்பவர் சர்தார்ஜி ஜோக்குகள் எங்களது மதத்தினரை புண்படுத்துவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதனால் இனி சர்தார்ஜி ஜோக்குகள் படிக்க முடியுமா? என்பது உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications