விவசாயிகள் தற்கொலை வழக்கில் அலட்சியம்.... மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'- ரூ25,000 அபராதம்
டெல்லி: விவசாயிகள் தற்கொலை வழக்கில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி உச்சநீதிமன்றம் ரூ25,000 அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் 4 வார கால அவகாசம் அளித்திருந்தது.

ஆனால் மத்திய அரசோ, பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது, மத்திய அரசு விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் அலட்சியமாக இருப்பதாக கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் மத்திய அரசு குறிப்பிட்ட காலத்துக்குள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யாததால் ரூ25,000 அபராதம் விதித்தது; மேலும் 4 வார காலத்துக்குள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications