தி.நகரில் மூடப்பட்ட கடைகள் திறப்பு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை தியாகராயர்நகரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கு சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (சி.எம்.டி.ஏ.) கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீல் வைத்தன.

இதை எதிர்த்து தி.நகர் வியாபாரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 2012 ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 6 வாரங்கள் கடைகள் திறக்க மட்டுமே அனுமதி அளித்தது.

இந்நிலையில், 6 வாரங்கள் மட்டுமே அவகாசம் அளித்த நிலையில் தி.நகரில் உள்ள கடைகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்படுகின்றன என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அக்டோபர் 17ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+