சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு
Recommended Video
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மகாதேவன் அமர்வை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து ரமாணி மேகாலயாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி பதவியிலிருந்து ரமாணி விலகினார். இந்த நிலையில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகளை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

5 பக்க அறிக்கை
சென்னை புறநகர் பகுதியில் 3.18 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரு வீடுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தஹில் ரமாணி பதவி விலகிய பின்னர் மத்திய உளவுத் துறை 5 பக்க அறிக்கையை அனுப்பியுள்ளது.

உத்தரவு
அந்த அறிக்கையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும் சிலைக் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை கலைத்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு
இதுகுறித்து தஹில் ரமாணியிடம் கேட்டபோது இன்று வரை நான் எந்தவிவகாரத்துக்கும் கருத்து சொல்லவில்லை. இதுதான் என் நிலைப்பாடு என்றார். சென்னை புறநகர் பகுதியில் செம்மஞ்சேரி மற்றும் திருவிடந்தையில் லோரைன் டவரில் இரு புதிய வீடுகளை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லோன்
அந்த வீடுகளை வாங்க மொத்தம் 3.18 கோடி தொகையில் எச்டிஎஃப்சி வங்கியிலிருந்து ரூ.1.62 கோடி கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. மீதமுள்ள 1.56 கோடியை தனது சொந்த பணத்திலிருந்து ஜூன்- ஜூலை 2019 செலுத்தியுள்ளார். அவருக்கு 6 வங்கிக் கணக்குகள் உள்ளன.

காசோலை
அவற்றில் 3 கணக்குகளை அவரது கணவருடன் இணைந்து வைத்துள்ளார். ஒன்று தாயுடனும், மற்றொன்று ஊதிய கணக்கும், இன்னொன்று அவரது மகனுடையது என தெரியவந்தது. கடந்த ஜூலை 8-ஆம் தேதி 18 லட்சம் பணம் அவரது தாயுடன் உள்ள ஜாயின்ட் அக்கவுண்டில் செலுத்தப்பட்டு அடுத்த மாதமே அந்த பணம் காசோலை மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவத்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications