மவுலிவாக்கத்தில் அபாயகரமான மற்றொரு கட்டிடத்தை இடிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: மவுலிவாக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அபாயகரமான மற்றொரு கட்டிடத்தையும் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மழையின் போது கட்டுமான பணியின்போது 11 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பலியானார்கள்.

இதையடுத்து இடிந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள 2-வது கட்டிடத்தையும் பாதுகாப்பு காரணங்களுக்காக இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கட்டிட உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கட்டிட இடிப்பு சம்பந்தமாக மீண்டும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி மற்றும் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகினர். அப்போது புதிய கட்டிடம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் அசோக் குமார் குப்தா இடைக்கால அறிக்கை ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர் விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் மீண்டும் நிபுணர் குழுவுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மவுலிவாக்கம் புதிய கடிட்டம் குடியிருக்க தகுதியற்றது என்று 4-பேர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றம், நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாக கொண்டு மற்றொரு கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிட்டது.
இடிக்க ஆகும் செலவு தொகை தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications