வரிச் சலுகை..வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரிச் சலுகை அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பிரிட்டனின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் 2007-ம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தை கையகப்படுத்தியது தொடர்பாக ரூ.7,990 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை நோட்டீஸ் அளித்தது. இந்த தொகையை வோடபோன் நிறுவனம் செலுத்த மறுத்ததால், வட்டியுடன் சேர்த்து பாக்கித் தொகை ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

இந்நிறுவனத்துக்கு சிறப்புச்சலுகை அளித்து, சமரசத்தில் ஈடுபட கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்பேரில், சமரசத்தில் ஈடுபட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வாஜித் பட்டாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், மனுதாரர் கூடுதல் ஆவணங்களுடன் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.












Click it and Unblock the Notifications