நீட் போராட்டத்துக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
நீட் போராட்டங்களுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுத்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டங்களை தடை செய்ய கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதாக மத்திய முதலில் உறுதி தந்தது. இதுதொடர்பாக தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

அனிதாவின் தற்கொலைக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.
அதில் அவர், அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். சிபிஎஸ்இ தரத்துக்கு தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நீட் போராட்டங்களுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அப்படி என்ன அவசரமாக விசாரிக்க தேவை இருக்கிறது? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications