இஷ்ரத் ஜஹான் வழக்கு: போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரும் மனு டிஸ்மிஸ்
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தில் குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் வாக்குமூலம் அளித்தார்.

அவரது வாக்குமூலத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு குஜராத் போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் மாநில டிஐஜியாக இருந்த டி.ஜி.வன்சாரா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது, இஷ்ரத் ஜஹான் ஒரு தீவிரவாதிதான் என ஹெட்லி வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதால் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா வாதிட்டார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications