சு.சுவாமி கைதாகாமல் தப்பினார்... அஸ்ஸாம் கோர்ட் பிடிவாரண்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அஸ்ஸாம் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் காசிரங்கா பல்கலைக் கழகத்தில் மார்ச் 15-ந் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி பேசினார் என அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.

swamy

இந்த வழக்கில் மார்ச் 19-ந் தேதியன்று சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக கரீம்கஞ்ச் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனிடையே மே 21-ந் தேதியன்று வெறுப்பை தூண்டும் வகையிலான பேச்சு எது? என விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவையும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகத சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை கரீம்கஞ்ச் நீதிமன்றம் கடந்த 1-ந் தேதி பிறப்பித்தது. இதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருந்தார்.

இம்மனு மீது கடந்த மாதம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை வேறு நீதிபதி பெஞ்சுக்கு மாற்றுவதாகவும் அதன் மீது ஜூன் 22-ல் விசாரணை நடைபெறும்; அதுவரை கைது நடவடிக்கை இருக்காது எனவும் கூறியிருந்தது.

இந்த நிலையில் இன்று சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான விசாரணையின் போது, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் 'வெறுப்பை தூண்டும் வகையிலான பேச்சு' தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+