கதுவா வன்புணர்வு வழக்கு.. பஞ்சாப் நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றிய உச்ச நீதிமன்றம்
காஷ்மீரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
டெல்லி: காஷ்மீரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
காஷ்மீரில் இருக்கும் கதுவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் காரணமாக பாஜக கட்சியை சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதுகுறித்த வழக்கு காஷ்மீர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. காஷ்மீர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் நேர்மையாக நடக்காது என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தினமும் விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுமுறை தினம் தவிர மற்ற நாட்களில் வழக்கை தள்ளி போட கூடாது என்றுள்ளது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்றுள்ளது. அதேபோல் காஷ்மீர் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் முக்கியமாக அந்த சிறுமியின் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்தினர் சார்பாக வாதாடும் பெண் வழங்கறிஞருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications