கதுவா வன்புணர்வு வழக்கு.. பஞ்சாப் நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றிய உச்ச நீதிமன்றம்
காஷ்மீரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
டெல்லி: காஷ்மீரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
காஷ்மீரில் இருக்கும் கதுவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் காரணமாக பாஜக கட்சியை சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதுகுறித்த வழக்கு காஷ்மீர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. காஷ்மீர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் நேர்மையாக நடக்காது என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தினமும் விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுமுறை தினம் தவிர மற்ற நாட்களில் வழக்கை தள்ளி போட கூடாது என்றுள்ளது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்றுள்ளது. அதேபோல் காஷ்மீர் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் முக்கியமாக அந்த சிறுமியின் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்தினர் சார்பாக வாதாடும் பெண் வழங்கறிஞருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications