ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சரியே- கேகே வேணுகோபால் #RightToPrivacy
ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஆதார் வழக்கில் தனி மனித ரகசியத்தை காப்பது அடிப்படை உரிமை என்ற தீர்ப்பை தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் வரவேற்றுள்ளார்.
சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறிப்பாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்பதற்கு எதிராகவும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆதார் நடைமுறையில் தனி மனித ரகசியத்தை பாதுகாப்பது மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதன் தீர்ப்பை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 9 அமர்வு நீதிபதிகள் இன்று அளித்தன.
அப்போது அரசியல் சாசன பிரிவு 21-இன்படி தனிமனித ரகிசயத்தை பாதுகாப்பது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தனர். இது மத்திய அரசுக்கு எதிரான தீர்ப்பாக கருதப்பட்ட போதிலும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் அந்த தீர்ப்பு மிகவும் சரி என்று கூறி அதை வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications