இன்று கூடும் நாடாளுமன்றம்: புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்குகிறது.
நாடாமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்குகிறது. இந்த அமர்வில் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயம் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தியை சிபிஐ கைது செய்தது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் செயல் என்று பிரச்சனையை கிளப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் வங்கியில் ரூ. 12 ஆயிரத்து 600 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடினார். தான் பிசியாக இருப்பதால் விசாரணைக்காக இந்தியாவுக்கு வர முடியாது என்று தெரிவித்தார் நீரவ் மோடி.
இது குறித்து பாஜக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்காமல் ஓயப் போவது இல்லை என்கின்றன எதிர்க்கட்சிகள்.












Click it and Unblock the Notifications