For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் குழந்தையைக் கொன்று புதைத்த கொடூர சித்தி - வீடியோ

திருப்பதியில் மூத்த மனைவியின் ஏழு வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று புதைத்த இரண்டாம் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் வழியில் கணவரின் முதல் மனைவியின் குழந்தையை இரண்டாவது மனைவியே இரக்கமின்றி கொன்று புதைத்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஈடுகாவ் என்னும் ஊரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருவது உண்டு.

Second wife murder first wife's daughter cruelly in Tirupathi

இந்நிலையில் தேவராஜ் இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதிக்கு கட்டட வேலைக்கு வந்துள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். சம்பவத்தன்று, முதல் மனைவியின் 7 வயது குழந்தை ராதாவை இரண்டாம் மனைவி ஜோதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தையைக் காணவில்லை என திடீரென போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்பதிக்கு செல்லும் மலைப் பாதையில் குழந்தையை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

English summary
In family dispute second wife of Devaraj, a coolie murdered first wife's daughter and police arrested her in Tirupathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X