திருப்பதியில் குழந்தையைக் கொன்று புதைத்த கொடூர சித்தி - வீடியோ
திருப்பதியில் மூத்த மனைவியின் ஏழு வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று புதைத்த இரண்டாம் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் வழியில் கணவரின் முதல் மனைவியின் குழந்தையை இரண்டாவது மனைவியே இரக்கமின்றி கொன்று புதைத்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஈடுகாவ் என்னும் ஊரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருவது உண்டு.
இந்நிலையில் தேவராஜ் இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதிக்கு கட்டட வேலைக்கு வந்துள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். சம்பவத்தன்று, முதல் மனைவியின் 7 வயது குழந்தை ராதாவை இரண்டாம் மனைவி ஜோதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தையைக் காணவில்லை என திடீரென போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்பதிக்கு செல்லும் மலைப் பாதையில் குழந்தையை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.