விசாகப்பட்டினத்தில் ஒருநாள் கிரிக்கெட்: சீமாந்திரா வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
காககிநாடா: விசாகப்பட்டினத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று சீமாந்திரா வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.
வரும் 24-ந் தேதி விசாகப்பட்டினத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீமாந்திரா வழக்கறிஞர்களும் ஒருநாள் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் முப்பால சுப்பாராவ் கூறுகையில், சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் காகிநாடாவில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் ஒருநாள் போட்டியை நடத்துவது என்பது ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக போராடுவோரை காயப்படுத்தும் செயல். இதனால் இந்தப் போட்டியை நடத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இம்மாதம் 23-ந் தேதி வரை போராட்டத்தைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. 24-ந் தேதி கடப்பாவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications