இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியதே தவறு!- மத்திய அமைச்சர் வி.கே.சிங்
ராய்ப்பூர்: கடந்த 1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியதே தவறு, என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவத் தலைமை தளபதியுமான வி.கே.சிங் கூறினார்.
உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூரில், "தைரியமும், தண்டனையும்' என்ற தனது சுயசரிதை தொடர்பான நிகழ்ச்சியில் வி.கே.சிங் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சண்டையில், இலங்கை அரசுடனான உடன்படிக்கையின் மூலம் இந்தியா நுழைந்தது, கொள்கை ரீதியில் தோல்வியாகும். இந்தியப் படையால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பல்வேறு காரணங்களால், இந்தத் தோல்வி ஏற்பட்டது. இந்திய ராணுவத்தால் அமைதியை ஏற்படுத்த முடியாமல், போரில் சிக்கிக்கொண்டது.
ஒருகட்டத்தில், இந்திய அமைதிப்படைக்கு எதிராக அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா, விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்.
மாவோயிஸ்ட் பகுதிகளில் ராணுவம் எதற்கு?
மாவோயிஸ்ட் அச்சுறுத்துதல்களுக்கு எதிராக, நமது படைகள் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. அவர்களின் பகுதிகளில் நுழையும் ராணுவத்தினர், நமது சொந்த மக்களையே தாக்க வேண்டியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் 76 ராணுவ வீரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.
அந்த நேரத்தில், மாவோயிஸத்துக்குப் பின்னணியில் உள்ள காரணத்தை நாம் ஆராய வேண்டும் என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கூறினேன்.
மாவோயிஸ்ட் பகுதிகளில் ராணுவத்தினரைக் குவிப்பதால், ராணுவத்தின் மீதான நன்மதிப்பு களங்கப்படுகிறது," என்றார் வி.கே.சிங்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications