அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்.. உறுதிமொழி ஏற்ற ஐபிஎஸ் அதிகாரி!
அயோத்தியில் ராமர்கோவில் கட்டியே தீருவோம் என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உறுதிமொழி ஏற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: அயோத்தியில் ராமர்கோவில் கட்டியே தீருவோம் என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உறுதிமொழி ஏற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.

ஐபிஎஸ் அதிகாரி உறுதிமொழி
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என ஐபிஎஸ் அதிகாரி உறுதிமொழி ஏற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோவால் சர்ச்சை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று உத்தரப்பிரதேச மாநில ஊர்க்காவல் துறை டிஜிபி சூர்ய குமார் சுக்லா எடுத்த உறுதிமொழி தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி சுக்லா
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சுக்லா பார்வையாளர்கள் முன்னிலையில் ராம பக்தர்களாகியாய் நாம், ராமர் கோவிலை விரைவாக கட்டி முடிப்போம் என்று கூறி உறுதிமொழி ஏற்று உள்ளார்.

விமர்சனங்கள்
இதுதொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுக்லா உறுதி மொழி ஏற்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications