பாலியல் சீண்டலா.. புகார் தர தயக்கமா.. நாங்க இருக்கோம்: பெங்களூர் காவல்துறை புது முயற்சி
பெங்களூர்: பாலியல் துன்புறுத்தலுக்கு (sexual harassment) உள்ளாகும், பெண்கள், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தயங்குவதுதான், காமுகர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. தொடர்ந்து உரச தொடங்குகின்றனர். பெண்களுக்கு சட்டம் என்னதான் பாதுகாப்பு வழங்கினாலும், அதை பயன்படுத்த பெண்கள் முன்வராததற்கு பயம், வெட்கம் போன்ற பல காரணங்கள் உண்டு. இந்த தயக்கங்களை தவிடுபொடியாக்கி, பாதிக்கப்பட்ட பெண்களை காவல் நிலையம் வரவைக்க பெங்களூர் போலீசார் தொடங்கப்போகும் புது திட்டம்தான் ரெடி டூ ரிப்போர்ட் (readytoreport).

நாங்க ரெடி, அப்போ நீங்க?
பெங்களூர் காவல் துறை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா என்ற அமைப்பு இணைந்து, ரெடி டூ ரிப்போர்ட் கோஷத்தை முன் வைக்க உள்ளன. 2014-16ம் ஆண்டு காலத்தை, இதன் முதல் கட்டமாக வரையறுத்துள்ளனர்.

10 ஸ்டேஷன்கள்
பெங்களூர் நகரிலுள்ள எலக்ட்ரானிக்சிட்டி, கோரமங்களா, இந்திராநகர், அசோக்நகர், ஒயிட்பீல்ட், பசவனகுடி, சதாசிவநகர், கப்பன்பார்க், சிக்பேட்டை, யஷ்வந்த்பூர் ஆகிய 10 காவல் நிலையங்கள், இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பிரண்ட்லி ஸ்டேஷன்கள்
இந்த பத்து காவல் நிலையங்களும், புகார்களை ஊக்குவிக்கும் காவல் நிலையங்கள் என்று அழைக்கப்படும். இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல், பலாத்கார வழக்குகள் வித்தியாசமாக கையாளப்படும். சுருக்கமாக சொல்லப்போனால் 'புகார்தாரர் பிரெண்ட்லி'யாக இக்காவல் நிலையங்கள் செயல்படும்.

சட்ட விழிப்புணர்வு
எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையை வலுவாக பதிவு செய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சட்டத்தில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்த தெளிவை கொடுப்பதும் இப்போலீசாருக்கு பணியாகும். அப்படி பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கும்போதும், அவருக்கு விளக்கம் தரப்படும்போதும், பெண் காவலர்களும் உடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

வெப்சைட்டும் இருக்கு
www.readytoreport.in என்ற வெப்சைட் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், எவ்வாறு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அசத்தல் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications