எல்லை தாண்டி 2.5 கிலோமீட்டர் உள்ளே சென்று பாக்.குக்குள் "தீபாவளி" கொண்டாடிய இந்தியா!
ஸ்ரீநகர்: இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளன.
கடந்த 18ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 18 வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது.

4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டாலும் அவர்கள் 18 இந்திய வீரர்களை கொன்றதை நினைத்து பாகிஸ்தான் கர்வத்தில் இருந்தது. இந்நிலையில் தான் இந்தியாவை தாக்க எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டோரம் பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம்கள் இருப்பதை உளவுத் துறை கண்டுபிடித்துக் கூறியது.
இதையடுத்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை இரவு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நேரம் குறித்தன. இரவு 12. 30 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த இந்திய விமானப்படை அதிகாலை 4.30 மணி வரை தீவிரவாத முகாம்கள் மீது சரமாரியாக குண்டு மழை வீசித் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து 4 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 5 பாகிஸ்தான் தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற அதிரடி தாக்குதல் இனியும் தொடரும் என்று ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தீவிரவாத முகாம்களை தாக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications