லண்டனில் 'அவரை' நான் சந்திக்கவே இல்லீங்கோ: ஷாருக்கான்
மும்பை: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை லண்டனில் சந்தித்து பேசவில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மோடியை லண்டனில் சந்தித்து பேசியதாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான்
நான் ஓய்வு எடுக்க லண்டனுக்கு செல்லவில்லை. நான் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு முடியும் மறுபடியும் காலையில் துவங்கிவிடும் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

கடைசி நாள்
படப்பிடிப்பின் கடைசி நாள் அன்று மட்டும் இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை 6 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு நான் லண்டனுக்கு கிளம்பிச் சென்றேன் என்கிறார் ஷாருக்.

குழந்தைகள்
மதியம் 2 மணிக்கு நான் லண்டனை அடைந்தேன். மறுநாள் என் மகள் மற்றும் மகனின் பள்ளி அட்மிஷன் வேலையாக அலைந்து கொண்டிருந்தேன். வேறு எதற்கும் நேரமே இல்லை என ஷாருக் கூறியுள்ளார்.

லலித் மோடி
லண்டனில் நான் லலித் மோடியை சந்திக்கவில்லை. நான் அவரை சந்தித்து பேசியிருந்தால் இந்நேரம் அது உலகத்திற்கே தெரிய வந்திருக்கும் என்கிறார் ஷாருக்கான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வாத்ரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வாத்ரா தன்னை சந்தித்து பேசியதாக லலித் மோடி தெரிவித்ததை அடுத்து ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications