சகிப்பின்மை: அடிச்சாரு பாருய்யா ஷாருக்கான் அந்தர் பல்டி
மும்பை: இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாக நான் கூறவே இல்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர் கான் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார். பல்வேறு நகரங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது கன்னத்தில் அறைபவருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்துள்ளது சிவசேனா.
இந்நிலையில் ஷாருக்கான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசியுள்ளார்.

இந்தியா
இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று நான் கூறவே இல்லை. அது பற்றி செய்தியாளர்கள் என்னிடம் முன்பு கேட்டபோது பதில் அளிக்க மறுத்தேன். அவர்கள் வற்புறுத்தியதால், இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக ஆக்க வாலிபர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றேன் என்றார் ஷாருக்.

திரித்துவிடுவார்கள்
எப்பொழுது பார்த்தாலும் நான் ஒன்று கூறுவேன். ஆனால் அதை திரித்து மக்கள் வேறு ஏதாவது கூறுவார்கள். இதனால் நான் தான் பிரச்சனையில் சிக்குவேன் என்று ஷாருக் தெரிவித்தார்.

சகிப்புத்தன்மை
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாகும் என்று ஷாருக்கான் கடந்த 2ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கூறினார்.

பாகிஸ்தான் ஏஜெண்ட்
ஷாருக்கான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசியதும் அவரை பாஜகவினர் பாகிஸ்தான் ஏஜெண்ட், அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் விமர்சித்தார்கள். இந்நிலையில் தான் அவர் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசவே இல்லை என்று பல்டி அடித்துள்ளார்.

விருதுகள்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி விருதுகளை திருப்பிக் கொடுப்பவர்களின் முடிவை மதிக்கிறேன். ஆனால் அதற்காக நானும் அப்படி செய்ய வேண்டியது இல்லை என்று ஷாருக் முன்பு தெரிவித்தார் என்பது குறுப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications