பொட்டாசியம் குளோரைடை செலுத்தி சரத்பிரபு தற்கொலை- டெல்லி போலீஸ்
தமிழக மாணவர் சரத்பிரபு பொட்டாசியம் குளோரைடை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் மருத்துவமனை கழிவறையில் தமிழக மாணவர் சரத்பிரபு பொட்டாசியம் குளோரைடை செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
சரத்பிரபு உடன் தங்கியிருந்த மாணவர்களுடன் விசாரித்த நிலையில் இந்த தகவலை கூறுவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாணவர் சரத்பிரபு யூசிஎஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்எஸ் படித்து வந்தார். இன்று காலையில் மாணவர் சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்திசாலி மாணவர்
சரத்பிரபு பிளஸ் 2வில் 1187 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பின்னர், கோவையில் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றிருக்கிறார். அதன் பின்னர் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு எம்.டி., படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்த வந்த அவர் இன்று காலை மர்மமான முறையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மாணவர் மர்ம மரணம்
கையில் ஊசி போட்டுக்கொண்டு மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சரத்பிரபு என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. சரத்பிரபு இறந்தது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர்.
சடலமாக கண்டெடுப்பு
சரத்பிரபுவுடன் அவரது நண்பர் அரவிந்த் என்பவர் தங்கியிருக்கிறார். அவர் இன்று காலை சரத்தின் பெற்றோருக்கு போன் செய்துள்ளார். முதலில், சரத்பிரபு கழிவறையில் விழுந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு சரத்பிரபு இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். சரத்பிரபுவின் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி மரணம்
சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சரத்பிரபு தற்கொலை செய்து கொண்டதாக கருதுவதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர். சரத்பிரபுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கழிவறையில் ஊசி கண்டெடுக்கப்பட்டதாகவும், பொட்டாசியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
சரத்பிரபு தந்தை கண்ணீர்
பொட்டாசியம் குளோரைடை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இது உடனடியாக நரம்புகளை முடக்கிப் போடக்கூடியது. உடன் தங்கியிருந்தவர்களுடன் நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததாக டெல்லி போலீசார் கூறினார். அதே நேரத்தில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார் சரத்பிரபுவின் தந்தை செல்வமணி.